விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் உலக மகளிர் தின விழா நடந்தது. இதன் துவக்க விழாவில் பழைய மாணவியர் சங்க செயலாளர் மீனா வரவேற்றார். கல்லுாரி தலைவர் வன்னியானந்தம் தலைமை வகித்தார். உப தலைவர் சந்திரசேகரன், கல்லுாரி முதல்வர் சுந்தரபாண்டியன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் அசோக்குமார் பேசினர். செந்தமிழ் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி பேசினார். போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பேராசிரியர் மகேஷ்வரி நன்றி கூறினார்.
#virudhunagar