“நம்முடைய குடிமக்கள் வெளிநாட்டில் சிக்கியிருக்கும்போது, அரசு அவர்களுக்காக இலவசமாக விமானப் பயணத்தை ஏற்பாடு செய்கிறது. குஜராத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கான போக்குவரத்திற்காகவும் உணவிற்காகவும் 100 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பிரதமரின் கொரோனா நிதிக்காக ரயில்வே அமைச்சகம் 151 கோடி ரூபாயை தானமாக அளிக்கிறது. ஆனால், தொழிலாளர்களுக்காக இலவச ரயில் போக்குவரத்தை அளிக்க முடியாதா?
ஆகவே, இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு முடிவெடுத்திருக்கிறது. வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஊர் திரும்புவதற்குத் தேவையான ரயில் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகள் செலுத்தும்” – சோனியா காந்தி