பட்டாம்பூச்சியாக பறக்க வேண்டிய மாணவர்கள் உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்றால் பள்ளிக்கு செல்லாமல் ஊரடங்கு பெயரில் 10 மாதங்களுக்கும் மேல் வீட்டில் முடங்கினர். பெயரளவில் ஆன்லைன் வகுப்புகள், சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்க முடியாத நிலையில் வாட்ஸ் ஆப், வீடியோ என ஆசிரியர்கள் முகம் காணாமல் கல்வி கற்றனர். ஒரு வழியாக 10, பிளஸ் 2 வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டதும் மடை திறந்த வெள்ளம் போல் பள்ளியை நோக்கி மாணவர்கள் உற்சாகத்துடன் சென்றனர். விருதுநகரில் 388 பள்ளிகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான பள்ளிகளில் 90 சதவீதம் மாணவர் வருகை இருந்தது. கொரோனா தாக்கத்தில் மீண்டு(ம்) வந்த மாணவர், ஆசிரியர்கள் முதல் நாள் அனுபவம் குறித்து…