ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளுக்காக லட்சகணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.இதன்படி வடிகால்கள், பேவர்பிளாக் ரோடுகள், சிறுமின்விசை இறைப்பான், தரைமட்ட நீர்தேக்க தொட்டி, புதிய அலுவலக கட்டடம் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக, சேத்துாருக்கு ரூ.3 கோடி,வத்திராயிருப்பிற்கு ரூ.2.84 கோடி, செட்டியார்பட்டி மற்றும் காரியாபட்டிக்கு தலா ரூ.3.5 கோடி, சுந்தரபாண்டியம் மற்றும் மல்லாங்கிணருக்கு தலாரூ.50 லட்சம், வ.புதுபட்டிக்கு ரூ.25 லட்சம், எஸ்.கொடிக்குளத்திற்கு ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இதற்கான பணிகளை விரைவில் துவங்கவும் அறிவுறுத்தபட்டுள்ளது.