ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக சென்னை -குருவாயூர் எக்ஸ்பிரஸ் நேற்று முதல் பயணித்தது. விருதுநகரில் இருந்து திருநெல்வேலி வரை மின் பாதை பணிகள் நடப்பதால் சில ரயில்கள் வழித்தட மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன்படி சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம் வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முதல் விருதுநகரிலிருந்து சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வழியாக மாற்றி விடப்பட்டது.இதன்படி நேற்று மாலை 6 :10 மணிக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக கடந்து சென்றது.
Read MoreCategory: Srivilliputhur News
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானையை அடித்து துன்புறுத்தியதாக பாகன் பணியிடை நீக்கம்
தேக்கம்பட்டி யானைகள் புத்துணா்வு முகாமில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானையை அடித்து இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முகாமில் இருந்த யானை ஜெயமால்யதாவை அதன் பாகன் கோ. வினில்குமாரும், உதவி பாகன் அடித்து துன்புறுத்துவது போல் சமூக வலைதளங்களிலும், தனியாா் தொலைக்காட்சிகளிலும் விடியோ வெளியானது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். மேலும் யானையை அடித்து துன்புறுத்திய பாகன் கோ. வினில்குமாரை பணியிடை நீக்கம் செய்து கோயில் செயல் அலுவலா் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளாா். துன்புறுத்தியதாக அதன் பாகன் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.கோவை மாவட்டம், மேட்டுபாளையம் , தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணா்வு முகாம் கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா உள்பட பல்வேறு கோயில்களைச் சோ்ந்த யானைகள் பங்கேற்றுள்ளன.
Read Moreரூ.70க்கு மருத்துவ காப்பீடு அட்டை… கிராமங்களில் கூவி கூவி வசூல் வேட்டை
ஸ்ரீவில்லிபுத்துார் : அரசின் மருத்துவகாப்பீடு திட்டத்தின் அடையாள அட்டை எடுத்து கொடுத்து ரூ.70 வசூலிக்கும் பணியில் சில தனிநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது உண்மைத்தன்மை கொண்டதா என்பதை அறியாமல் பொதுமக்களும் வாங்கி செல்கின்றனர்.மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ரூ.5 லட்சம் வரை மருத்துவகாப்பீடு பெறும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதுஇதில் ஏற்கனவே கலைஞர் காப்பீடு திட்டம், முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றவர்களும் அப்படியே முழுஅளவில் இத்திட்டத்தில் இணைக்கபட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் தாங்களும் இருக்கிறமோ என்பதை பழைய ரேஷன்கார்டு, புதிய ஸ்மார்ட் கார்டு நம்பரை கொண்டு அந்தந்த நகர அரசு மருத்துவமனைகளில் இயங்கும் காப்பீடு திட்ட அலுவலகத்தில் உறுதிபடுத்தி கொள்ளலாம். இல்லாதவர்கள் அந்த அலுவலகத்தில் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வி.ஏ.ஓ.,விடம் சான்று பெற்று கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீடு திட்ட…
Read Moreவத்திராயிருப்பில் பஸ் டிப்போ : பிப்.15க்கு பின் செயல்பட வாய்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டடம், வத்திராயிருப்பில் அரசு பஸ் டிப்போ பிப்.15 க்கு பின் திறக்கபட உள்ளது.ஸ்ரீவில்லிபுத்துாரில் வாடகை கட்டடத்தில் இயங்கிய வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு கிருஷ்ணன்கோவில் ரோட்டில் சொந்த கட்டடம் கட்டபட்டுள்ளது. இதேபோல் வத்திராயிருப்பில் அரசு பஸ் டிப்போவிற்கான பணிகள் நிறைவு பெற்று வருகிறது. இதையடுத்து இவ்விரு கட்டடங்களும் பிப்.15க்கு பின் திறக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.வத்திராயிருப்பில் டிப்போ திறக்கபட்டதும் மதுரை, தேனி, விருதுநகர், திருச்செந்துார், சிவகாசிக்கு பஸ்கள் இயக்க திட்டமிடபட்டுள்ளது. இதற்காக பணிகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Read Moreபார்சல் புக்கிங்: அழைக்கிறது ரயில்வே
ஸ்ரீவில்லிபுத்துார்: மாவட்டத்தில் ராஜபாளையம், சாத்துார், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்களிலிருந்து பார்சல்களை அனுப்பும் வசதி செய்யபட்டுள்ளதால் அதை பயன்படுத்தி கொள்ளுமாறு பொதுமக்களுக்கும்,வியாபார நிறுவனங்களுக்கும் ரயில்வே நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.இதன்படி வீட்டு உபயோக பொருட்கள், டுவீலர்கள் , வணிக உற்பத்தி பொருட்கள், விளைபொருட்கள் என அனைத்து வகை பொருட்களையும் இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் அனுப்பமுடியும். இதற்காக ராஜபாளையத்தில் சிலம்பு, விருதுநகரில் பொதிகை மற்றும் மைசூர் எக்ஸ்பிரஸ், சாத்துாரில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் 5 நிமிடம் நின்று செல்ல அறிவுறுத்தபட்டு பார்சல்கள் புக்கிங் செய்யும் பணி துவங்கி உள்ளது. இதற்காக போதிய விளக்கங்கள் பெறுவதற்கு ரயில்வே மண்டல வணிக ஆய்வாளரை 90038 62958ல் தொடர்பு கொள்ளலாம்.
Read Moreவருது தேர்தல்; வந்தது நிதி
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளுக்காக லட்சகணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.இதன்படி வடிகால்கள், பேவர்பிளாக் ரோடுகள், சிறுமின்விசை இறைப்பான், தரைமட்ட நீர்தேக்க தொட்டி, புதிய அலுவலக கட்டடம் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக, சேத்துாருக்கு ரூ.3 கோடி,வத்திராயிருப்பிற்கு ரூ.2.84 கோடி, செட்டியார்பட்டி மற்றும் காரியாபட்டிக்கு தலா ரூ.3.5 கோடி, சுந்தரபாண்டியம் மற்றும் மல்லாங்கிணருக்கு தலாரூ.50 லட்சம், வ.புதுபட்டிக்கு ரூ.25 லட்சம், எஸ்.கொடிக்குளத்திற்கு ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இதற்கான பணிகளை விரைவில் துவங்கவும் அறிவுறுத்தபட்டுள்ளது.
Read Moreஸ்ரீவி.,வன அலுவலர் கேரளாவிற்கு மாற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வன உயிரின சரணாலய மாவட்ட வன அலுவலர் முகமது ஷாபாப் கேரளாவிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். நேரடி ஐ.எப்.எஸ்., அதிகாரியான இவர், சில ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்துாரில் மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வந்தார். பணியின்போது எவ்வித அறிவிப்புமின்றி வனப்பகுதியில் ஆய்வு செய்வார். இவரது பணிக்காலத்தில் வனப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதித்ததாக ரேஞ்சர் சஸ்பெண்ட் செய்யபட்டார். சாப்டூர் வனப்பகுதியில் இறந்த யானை எரிக்கபட்டபோது அப்பகுதி ரேஞ்சர் உட்பட 4 வனத்துறை அலுவலர்களை சஸ்பெண்ட் செய்தார். சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்துார் பந்தப்பாறையில் அனுமதியின்றி சந்தன மரங்கள் வைத்திருந்த கோவை வனத்துறை அதிகாரியின் மனைவி மீது வழக்கு பதிவு செய்தார். அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கேரள வனத்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது மதுரை மாவட்ட வனஅலுவலர் ஆனந்த் கூடுதல் பொறுப்பாக…
Read Moreஆண்டாள் நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு,நெருக்கடி
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பஜார் வீதிகளில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் நடந்து செல்லமுடியாத அளவிற்கு, தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் டூவீலர்கள் முதல் கனரக வாகனங்கள் வரை தாறுமாறாக நிறுத்தபடுவதால் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர். பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., சுற்றளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, மார்க்கெட், கோயில்கள், சர்ச்சுகள், பள்ளி வாசல், வங்கிகள், மேல்நிலைபள்ளிகள், திருமண மண்டபங்கள் இருப்பதால் அதிக போக்குவரத்து நெருக்கடி தினமும் ஏற்படுகிறது. பஜார்வீதிகளோ சாலையோர சைக்கிள் ஸ்டாண்டுகளாக மாறி வருகிறது. பள்ளி வாசல் பகுதியிலிருந்து ஆண்டாள் கோயில் வாசல்வரை கடைகளின் விற்பனை பொருட்கள், டூவீலர்கள், தள்ளுவண்டிகள் என நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு நடந்து செல்வதற்கே பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பொது நடைபாதையை மறித்து கற்கள் நட்டிருப்பதால் ஆம்புலன்ஸ்கள் செல்லமுடியாதநிலை உள்ளது. அரசு மருத்துவமனை வடபுறம் மற்றும் உழவர்சந்தை பகுதிகளில் பொதுமக்கள் நடந்து…
Read Moreஎலியை பிடிக்க வீட்டுக்குள் புகுந்த பாம்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மடவார் வளாகம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன். (வயது 35). கூலி தொழிலாளி. இவர் நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவியும் கைக்குழந்தையும் இருந்து உள்ளனர். அப்போது அருகில் உள்ள வயக்காட்டு பகுதியில் இருந்து எலி ஒன்று வீட்டுக்குள் நுழைந்து உள்ளது. அதை விரட்டி பிடிப்பதற்காக 7 அடி நீளமுள்ள பாம்பு வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டுக்குள் பாம்பு நுழைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது கைக்குழந்தையை தூக்கி கொண்டு அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினார். பாம்பு, பாம்பு என சத்தம் போட்டார். உடனே அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு விட்டனர். அவரது வீட்டுக்குள் புகுந்த பாம்பு எலியை வேட்டையாடி கொண்டு இருந்தது. உடனே இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும்…
Read Moreஸ்ரீவி.,யில் தினமும் வருது
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பில் தினமும் 30 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைத்தும் குடிநீர் சப்ளை 10 நாட்களுக்கு ஒருமுறை வழங்குவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஸ்ரீவி.,யில் தாமிரபரணி குடிநீரானது 120 கி.மீ., துாரம் கடந்து சப்ளை செய்யபட்டு வந்தது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் தினசரி குடிநீர் சப்ளை வழங்கமுடியாதநிலை தொடர்ந்தது. இந்நிலையில் உள்ளூர் நீராதாரமான செண்பகதோப்பு பகுதி நகராட்சி கிணறுகள் சீரமைக்கபட்ட நிலையில் தினமும் 30 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. ஆனாலும் நகருக்கு 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் சப்ளை செய்கிறது நகராட்சி நிர்வாகம். இதனால் நகர் மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், நகராட்சி அலுவலக மேல்நிலை தொட்டியிலிருந்து தான் ஊரணிபட்டி, பெருமாள்பட்டி, திருமுக்குளம் பகுதி மேல்நிலை தொட்டிகளுக்கு தாமிரபரணி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன்…
Read More